உன்னை ஒவ்வொரு  முறை பார்க்கும் போதும் 
ஆவலில், என் இதயம் நழுவி இரைப்பையில் 
விழுந்து விடுமோ என்று சிறியதாய் ஒரு கலக்கம் 
என் நுரையீரல் தொடும் மூச்சுக் காற்று கூட 
உன் பூந்தேகத்தை  வருடிப் பார்க்க ஏங்கித் தவிக்கிறது 
நீ குளித்து விட்டு பூசிய மஞ்சள் வாசம் 
என்னை மீளா மயக்கத்தில்  மாய்க்கிறது  
உன் விழிகள் காட்டும் சிறு அசைவு கூட 
என்னை, மீன்களின் பின்னே செல்லும் கொக்கைப் போல 
உன் தாவணி பின்னே தவமியற்றச் செய்கிறது
'போய் வருகிறேன்' என்று உன் உதடுகள் உச்சரிக்கும் முன்பே 
என் நாணம் உனக்கு முன்பாக, உனக்காக காத்திருக்கிறது  
                                                                                              - மோகன் கந்தசாமி  
 
 
No comments:
Post a Comment